லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய டோனி..!


லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய டோனி..!
x

டோனி தனது 41-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் லண்டனில் கொண்டாடி மகிழ்ந்தார்.

லண்டன்,

இந்திய அணிக்காக மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரிய முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

டோனி தனது 41-வது பிறந்த நாளை நேற்று தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் லண்டனில் கொண்டாடி மகிழ்ந்தார். அவர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை அவரது மனைவி சாக்‌ஷி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த விருந்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக விம்பிள்டன் டென்னிசில் நடால் விளையாடிய பரபரப்பான கால்இறுதி ஆட்டத்தை டோனி கண்டுகளித்தார்.

டோனிக்கு இந்நாள், முன்னாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஈடுஇணையற்ற தலைவர். இந்திய கிரிக்கெட்டுக்காக நீங்கள் அளித்த எல்லாவிதமான பங்களிப்புக்கும் நன்றி. நீங்கள் எனக்கு மூத்த சகோதரர் போல் ஆகிவிட்டீர்கள். உங்கள் மீது எப்போதும் அன்பும், மரியாதையும் இருக்கும். பிறந்த நாள் வாழ்த்துகள் கேப்டன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், 'மற்ற அணிகளுக்கு டோனி போன்ற வீரர் கிடைக்கும் அதிர்ஷ்டம் இல்லை. எல்லோரும் விரும்பக்கூடிய சிறப்பு வாய்ந்த ஒரு வீரர்' என்று கூறியதுடன் அவரது பிரத்யேகமான ஹெலிகாப்டர் ஷாட்டை நினைவுப்படுத்தும் வகையில், 'ஓம் ஹெலிகாப்டராயா நமஹா' என்றும் பதிவிட்டுள்ளார்.


Next Story