அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார்- தலைமை செயல் அதிகாரி


அடுத்த ஆண்டும் சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார்- தலைமை செயல் அதிகாரி
x

அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக டோனி நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் கூறினார்.

இந்த ஆண்டில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் டோனி வழங்கினார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்ஷிப்பில் அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லாததால் மறுபடியும் டோனியிடம் கேப்டன் பதவி வந்தது இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2023) நடக்கும் 16-வது ஐ.பி.எல். போட்டியின் போதும் சென்னை சூப்பர் கிங்சின் கேப்டனாக 41 வயதான டோனியே நீடிப்பார் என்று அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் கூறியுள்ளார்.


Next Story