அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக ஆடுவார் - மைக்கேல் வாகன்


அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மா சென்னை அணிக்காக ஆடுவார் - மைக்கேல் வாகன்
x

Image : AFP 

தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார்

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனுக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் பலர் அதிருப்தி தெரிவித்ததுடன், ஐ.பி.எல். போட்டி தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகிறார்கள். தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையின் கீழ் மும்பை அணியில் ஒரு வீரராக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மா வேறு அணிக்கு மாறக்கூடும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு மட்டுமே இருப்பார். அடுத்த ஆண்டு ரோகித் சர்மாவை சென்னை அணியின் கேப்டனாக பார்க்கலாம். ஹர்திக் பாண்ட்யா தற்போது கடினமான காலகட்டத்தில் இருக்கிறார். இது அவரது தவறு கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறீர்களா என்று அணி நிர்வாகம் கேட்டால் எந்த வீரர் தான் வேண்டாம் என்று சொல்வார். இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவை மும்பை அணியின் கேப்டனாக இந்த ஆண்டு நீட்டித்து இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். ஹர்திக் பாண்ட்யாவை அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டில் கேப்டனாக நியமித்து இருக்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story