"வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு"- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டுவீட்


வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு- இந்திய அணியின் தோல்வி குறித்து சச்சின் டுவீட்
x

Image Courtesy: AFP/ Twitter BCCI

இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

மும்பை,

8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் இன்று நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்தும், விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், " ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடினால், நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.



Next Story