டிவிசன் லீக் அணிகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி - சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது


டிவிசன் லீக் அணிகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி - சென்னையில் அடுத்த மாதம் நடக்கிறது
x

தமிழ்நாடு டிவிசன் லீக் அணிகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல்முறையாக டிவிசன் லீக் அணிகளுக்காக 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டி.என்.சி.ஏ. லீக்கில் 2-வது டிவிசன், 3-வது டிவிசனில் முதல் இரு இடங்களை பிடித்த அணிகளும் 4-வது, 5-வது, 6-வது டிவிசனில் பல பிரிவுகளில் வெற்றி கண்ட அணிகளும் பங்கேற்கும்.

இதன்படி மொத்தம் 16 அணிகள் களம் காணுகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

அடுத்த மாதம் (மே) 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. அனைத்து ஆட்டங்களும் டர்ப் ஆடுகளத்தில் நடப்பதுடன், நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. போட்டிக்கான வெள்ளைநிற பந்து, வண்ணநிற சீருடைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வழங்குகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மின்னொளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Next Story