சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..
x
தினத்தந்தி 9 April 2023 4:28 AM GMT (Updated: 9 April 2023 4:31 AM GMT)

சென்னை- ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் (இரவு 7.30 மணி) நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி,டி, இ கீழ்தளம்) டிக்கெட் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

ரூ,3,000 விலைக்குரிய டிக்கெட் (டி, இ மேல்தளம்) ஆன்லைன் மூலமே விற்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிக்கெட்டை வாங்குவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் வெளியே குவிந்த ரசிகர்கள் இரவு முதலே காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது டிக்கெட்டை வாங்கிச்செல்கின்றனர்.


Next Story