வங்காள தேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக அளித்த விராட் கோலி


வங்காள தேச வீரருக்கு தனது பேட்டை பரிசாக அளித்த விராட் கோலி
x

கோப்புப்படம்  

இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

அடிலெய்டு,

இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2-ந்தேதி அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்கள் குவித்தது.

பின்னர் வங்காளதேசம் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. இவ்வாளவு பெரிய ஸ்கோரை வங்காளதேசம் சேஸிங் செய்ய வாய்ப்பில்லை, வெற்றி இந்தியாவுக்கு என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரர் லிட்டோஸ் தாஸ் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார்.

அர்ஷ்தீப் வீசிய போட்டியின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், புவி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஷமி வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தெறிக்கவிட்டார். இதனால் வங்காள தேசம் 6 ஓவரில் 60 ரன்களை எட்டியது. அத்துடன் தாஸ் 21 பந்தில் அரைசதம் விளாசினார்.

இதனால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், 7 ஓவர் முடிவில் மழை குறிக்கிட்டி ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியதும், லிட்டோஸ் தான் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ரன்களுக்கு ஓடும்போது, பவுணடரி கோடு அருகில் இருந்து கே.எல். ராகுல் வீசிய பந்து ஸ்டம்பை நேரடியாக தாக்கிய ரன்அவுட் ஆனார்.

இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளின் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியதாவது:-

டைனிங் ஹாலில் நாங்கள் உட்கார்ந்து இருக்கும்போது, விராட் கோலி அங்கு வந்தார். அப்போது லிட்டோஸ் தாஸ்க்கு அவருடைய பேட்டை பரிசாக வழங்கினார். என்னைப் பொறுத்த வரையில், லிட்டோன் தாஸ்க்கு இது ஒரு உத்வேகத்திற்கான தருணம் என்றார்.


Next Story