பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூரு அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி


பெண்கள் பிரீமியர் லீக்:  பெங்களூரு அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
x

சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்

பெங்களூரு,

2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி , டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் டெல்லி அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா அரைசதம் அடித்து அசத்தினார். ஆலிஸ் கேப்ஸி 46 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது


Next Story