பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு...!


பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: Twitter 

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி உ.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story