பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்


பெண்கள் பிரீமியர் லீக்; டெல்லி அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது  குஜராத்
x

20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதுகின்றன .இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்கம் முதல் டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது

இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியில் மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.


Next Story