பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா


பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்துக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
x

தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லாரா வால்வாட் 40 ரன்களும் , தாசிம் பிரிட்ஸ் 43 ரன்களும், மரிசேன் காப் 43 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 167 ரன்கள் இலக்குடன் ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது .

1 More update

Next Story