உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!


உலகக்கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!
x

Image Courtesy: @ICC

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

தர்மசாலா,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் மோத உள்ளன. நியூசிலாந்து 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 1 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வி பெற்று 6 புள்ளிகளுடனும் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிகொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story