உலகக்கோப்பை; லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான்...பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய மோர்கல்...!


உலகக்கோப்பை; லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான்...பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய மோர்கல்...!
x

Image Courtesy: Twitter

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதி பெறாமல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அப்பதவியில் இருந்து விலகி உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல் இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத கால ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story