ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் கொலம்பியா வீரர் ஒப்பந்தம்
x

Image Courtesy: @ChennaiyinFC

சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணியில் கொலம்பியாவைச் சேர்ந்த வில்மர் ஜோர்டான் கில் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வில்மர் ஜோர்டான் கில் 2024-25-ம் ஆண்டு சீசனுக்காக சென்னை அணியில் இணையும் 3-வது வெளிநாட்டு வீரர் ஆவார். அவர் 2022-ம் ஆண்டு நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிலும், 2023-ம் ஆண்டு பஞ்சாப் எப்.சி. அணியிலும் விளையாடி இருந்தார்.

வில்மர் ஜோர்டான் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இதுவரை 26 ஆட்டங்களில் ஆடி 16 கோல் அடித்துள்ளார்.



Next Story