ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னையின் எப்சி - கேரளா இடையேயான ஆட்டம் டிரா!


ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னையின் எப்சி - கேரளா இடையேயான ஆட்டம் டிரா!
x

image courtesy; twitter/ @IndSuperLeague

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் விளையாட உள்ளன.

கொச்சி,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சில லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு கடந்த 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இடைவெளி விடப்பட்டது. இந்நிலையில் இடைவெளி முடிவடைந்து மீண்டும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி மற்றும் கேரளா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணி தரப்பில் ரஹிம் அலி ஒரு கோலும், ஜோர்டான் முர்ரே 2 கோலும் அடித்தனர். கேரளா தரப்பில் டிமிட்ரியாஸ் டயமன்டாகோஸ் இரு கோலும் , கிவாமி பெப்ரா ஒரு கோலும் அடித்தனர்.

இதுவரை 8 ஆட்டத்தில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. கேரள அணி 5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் விளையாட உள்ளன.


Next Story