ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 6-வது இடத்துக்கு முன்னேறிய சென்னை


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி 6-வது இடத்துக்கு முன்னேறிய சென்னை
x

Image Courtesy : @ChennaiyinFC

சென்னை அணி 7 வெற்றி, 3 ‘டிரா’, 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னை,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூரை எதிர்கொண்டது. இதில் அபாரமாக செயல்பட்ட சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.

ஜாம்ஷெட்பூர் அணியில் ரி தச்சிகாவாவும் (22-வது நிமிடம்), சென்னை அணியில் ரபேல் கிரிவெல்லாரோ (52-வது நிமிடம்), ரஹீம் அலியும் (59-வது நிமிடம்) கோல் அடித்தனர். 20-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 7 வெற்றி, 3 'டிரா', 10 தோல்வி என 24 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 5 வெற்றி, 6 'டிரா', 10 தோல்வி என 21 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி சி.சி.டி.வி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, அங்கு நடக்க உள்ள பஞ்சாப் எப்.சி. அணிக்குரிய அடுத்த இரு ஆட்டங்களை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று பஞ்சாப் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story