ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் மோகன் பகான்


ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் மோகன் பகான்
x

வருகிற 18-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.

கொல்கத்தா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் எப்.சி.- முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்தது.

முதலாவது சுற்று கோலின்றி முடிந்த நிலையில் இந்த ஆட்டத்திலும் வழக்கமான நேரத்தில் கோல் ஏதும் (0-0) அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்ட 30 நிமிடங்களிலும் கோல் விழவில்லை.

இதையடுத்து வெற்றி தோல்வியை அறிய கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 4-3 என்ற கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வருகிற 18-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. - மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.


Next Story