ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி..!


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி..!
x

Image Courtesy: @OdishaFC

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இதையடுத்து இன்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் - ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஒடிசா அணி வெற்றி பெற்றது.


Next Story