கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!


கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!
x

image courtesy; twitter/ @ChennaiyinFC

இந்த தொடரில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்வதோடு மட்டுமல்லாது, ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுக்கு நேரிடையாக தகுதிபெறும்.

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்காளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் சென்னையின் எப்.சி. 'சி' பிரிவில் மும்பை சிட்டி, பஞ்சாப் மற்றும் கோகுலம் கேரளா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்வதோடு மட்டுமல்லாது, ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுக்கு நேரிடையாக தகுதிபெறும்.

இந்நிலையில் இந்த தொடரில் சென்னையின் எப்.சி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இன்று மோத உள்ளது.


Next Story