ஆசிய ஆக்கி போட்டி : ஒவ்வொரு கோல்-க்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிப்பு ..!


ஆசிய ஆக்கி போட்டி :  ஒவ்வொரு கோல்-க்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என அறிவிப்பு ..!
x

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த நிலையில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஸ் கோப்பையில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோல்-க்கும் 11 மரக்கன்றுகள் நடப்படும் என தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காடுகளின் நிலப்பரப்பை 33%அதிகரிக்கும் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது


Next Story