ஹாக்கி உலகக்கோப்பை - காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி..! தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா..! ரசிகர்கள் ஏமாற்றம்


ஹாக்கி உலகக்கோப்பை -  காலிறுதிக்கு முந்தைய சுற்றில்  தோல்வி..!  தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா..! ரசிகர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 22 Jan 2023 4:08 PM GMT (Updated: 22 Jan 2023 4:24 PM GMT)

இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன. இதன்படி 'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, 'சி' பிரிவில் 3-வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் 2-வது சுற்றில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றிரவு மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-3 நியூசிலாந்து ,என சமநிலையில் இருந்தன.இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது.

இதில் 5-4 என நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது.இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்திய அணி 9-வது முதல் 12-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.



Next Story