காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு


காமன்வெல்த் போட்டிகள் 2022 : மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
x

Image Courtesy : AFP 

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் 18 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் முதல் முறையாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. மன்பிரீத் சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அனுபவ வீரர் ஸ்ரீஜேஷ் இடம்பெற்றுள்ளார்.

18 பேர் கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு :

ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக், வருண் குமார், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்) , அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட ஷர்மா, மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக்.


Next Story