புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது வெற்றி


புரோ ஆக்கி லீக்: இந்திய அணி 2-வது வெற்றி
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

புவனேஸ்வர்,

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஆக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. ஷூட்-அவுட்டில் இந்தியா முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்தின் 4 வாய்ப்புகளில் 2 ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தி ஹீரோவாக ஜொலித்தார். முடிவில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை சுவைத்தது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் வருகிற 15-ந் தேதி மோதுகிறது.


Next Story