இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை


இந்திய தடகள வீராங்கனை   பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை
x
தினத்தந்தி 12 Sep 2017 12:00 AM GMT (Updated: 11 Sep 2017 8:55 PM GMT)

இந்திய தடகள வீராங்கனை 29 வயதான பிரியங்கா பன்வார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.

புதுடெல்லி

கடந்த ஆண்டு இவர் 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தி நேற்று முடிவை அறிவித்தது.

இதன்படி பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும். இதன் மூலம் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.


Next Story