அகில இந்திய கைப்பந்து: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி ‘சாம்பியன்’


அகில இந்திய கைப்பந்து: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 14 Feb 2018 9:00 PM GMT (Updated: 14 Feb 2018 8:53 PM GMT)

சட்டக்கல்லூரி அணிகளுக்கு இடையிலான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடந்தது

சென்னை,

சட்டக்கல்லூரி அணிகளுக்கு இடையிலான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடந்தது. இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி 25–8, 25–17 என்ற நேர்செட்டில் சிம்போசிஸ் சட்டக்கல்லூரி (ஐதராபாத்) அணியை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story