துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 20 Feb 2019 10:27 PM GMT (Updated: 20 Feb 2019 10:27 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார்.


* இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார். ஹர்மன்பிரீத் கவுர் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஹர்லீன் டியோல் இடம் பெறுகிறார். இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை கடந்த 2017-ம் ஆண்டு அணுகி அவரை முறைகேட்டில் ஈடுபட வைக்க முயற்சித்த சார்ஜாவை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் இர்பான் அன்சாரிக்கு, கிரிக்கெட் தொடர்பான பணிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-புனே சிட்டி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி- எப்.சி.கோவா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

* அகில இந்திய பல்கலைக்கழக செபக்தக்ரா போட்டி கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் யுகேஷ், விக்னேஸ்வரன், ராஜா ஆகியோர் அடங்கிய அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) வெண்கலப்பதக்கத்தை வென்றது. இதேபோல் ‘ரெகு’ பிரிவில் காசியானந்தா, அஜய் ஆதவன், தெய்வசண்முக சுந்தர், சக்தி, விக்னேஷ், முகேஷ்துரை ஆகியோர் அடங்கிய அண்ணா பல்கலைக்கழக அணி வெண்கலப்பதக்கம் பெற்றது. பதக்கம் வென்ற வீரர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா பாராட்டினார்.


Next Story