புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 20 Feb 2019 11:24 PM GMT (Updated: 20 Feb 2019 11:24 PM GMT)

புரோ கைப்பந்து லீக் போட்டியில், சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் குவித்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்ததுடன் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் ருஸ்லான்ஸ் 17 புள்ளிகளும், நவீன்ராஜா ஜேக்கப் 13 புள்ளிகளும், ருடிவெரேப் 11 புள்ளிகளும் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story