கூடைப்பந்து: சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றி


கூடைப்பந்து: சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:40 PM GMT (Updated: 21 Feb 2020 10:40 PM GMT)

கூடைப்பந்து போட்டியில், சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றிபெற்றன.

புவனேசுவரம்,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நேற்று தொடங்கியது. இதில் 17 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து 200 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங் கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.அணி (சென்னை), மகாத்மா காந்தி பல்கலைக்கழக (உத்தரபிரதேசம்) அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-9, 25-17, 25-21 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பல்கலைக்கழக அணி 87-58 என்ற புள்ளி கணக்கில் குருசேத்ரா பல்கலைக்கழக அணியை (அரியானா) எளிதில் தோற்கடித்தது. இதன் பெண்கள் பிரிவில் சென்னை பல்கலைக்கழக அணி 85-79 என்ற புள்ளி கணக்கில் ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தை (குவாலியர்) போராடி வீழ்த்தியது.

Next Story