பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து


பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து
x
தினத்தந்தி 27 April 2020 10:45 PM GMT (Updated: 27 April 2020 7:07 PM GMT)

பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாரீஸ், 

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தை உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா அச்சத்தால் இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் இன்னும் தொடங்கவில்லை. ஏற்கனவே 2 சுற்று ரத்தானது. 7 சுற்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த பாதிப்பு பட்டியலில் தற்போது பிரெஞ்ச் கிராண்ட்பிரியும் இணைந்துள்ளது.

பார்முலா1 கார்பந்தயத்தின் 10-வது சுற்றான பிரெஞ்ச் கிராண்ட்பிரி பந்தயம் லீ காஸ்ட்லெட் ஓடுதளத்தில் ஜூன் 28-ந்தேதி நடக்க இருந்தது. பிரான்சில் கொரோனா வைரசுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அங்கு ஜூலை 2-வது வாரம் வரை பெரிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடையும், பயணக்கட்டுப்பாடுகளும் அந்த நாட்டு அரசு விதித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பிரெஞ்ச் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர். இதற்கிடையே ஜூலை 19-ந்தேதி சில்வர்ஸ்டோனில் பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயம் ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story