புரோ கபடி லீக் தொடர்: 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ.48 கோடிக்கு ஏலம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Sep 2021 8:47 PM GMT (Updated: 1 Sep 2021 8:47 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில், 190க்கும் மேற்பட்ட வீரர்கள் ரூ.48 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

மும்பை, 

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் 3 நாட்கள் நடந்தது. 

இதில் மொத்தம் 190 வீரர்கள் ரூ.48.22 கோடிக்கு அணிகளால் வாங்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக பர்தீப் நார்வால் ரூ.1.65 கோடிக்கு உ.பி.யோத்தா அணிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Next Story