ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வி
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் அரைஇறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
வான்டா,
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் போட்டி பின்லாந்து நாட்டின் வான்டா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை வாங் ஜி யியுடன் மோதினார்.
63 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 12-21, 21-11, 7-21 என்ற செட் கணக்கில் வாங் ஜி யிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
Related Tags :
Next Story