ஆசிய விளையாட்டு போட்டி: வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி:  வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்
x
தினத்தந்தி 28 Sep 2023 2:17 AM GMT (Updated: 28 Sep 2023 8:42 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டி வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியின் 6-வது நாளான இன்று வுஷூ மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் தேவி தங்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

முதல் சுற்றில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வூ வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றிலும் வூ வெற்றி பெற்றார் என நடுவர் அறிவித்த நிலையில், இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வெண்கலம் வென்ற நிலையில், தற்போது அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.


Next Story