செஸ் ஒலிம்பியாட்: ஸ்விட்சர்லாந்து வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா


செஸ்  ஒலிம்பியாட்: ஸ்விட்சர்லாந்து வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
x

இந்திய ஓபன் சி பிரிவில் களமிறங்கிய சேதுராமன், ஐஸ்லாந்து வீரர் ஸ்டெபான்சனை வீழ்த்தினார்.

மாமல்லபுரம்,

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நேற்று களமிறங்கிய பிரக்ஞானந்தா எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்காவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா 41 வது நகர்த்தலில் வெற்றி பெற்று அசத்தினார்.

இதனை தொடர்ந்து இன்று அவர் ஸ்விட்சர்லாந்து வீரர் யானிக்குடன் மோதினார். அவர் 67 ஆவது நகர்த்தலில் யானிக்கை வீழ்த்தி வெற்றிபெற்றார். அதேபோல மகளிர் ஏ அணியில் விளையாடிய வைஷாலி தனது 65 ஆவது நகர்த்தலில் தோமாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். மேலும், இந்திய ஓபன் சி பிரிவில் களமிறங்கிய சேதுராமன், ஐஸ்லாந்து வீரர் ஸ்டெபான்சனை வீழ்த்தினார்.


Next Story