செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்று: உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி


செஸ் ஒலிம்பியாட் 10-வது சுற்று: உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி
x

image courtesy: Chess.com - India twitter

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

இந்த நிலையில் 10-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது

10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story