செஸ் ஒலிம்பியாட் 9-வது சுற்று: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி


செஸ் ஒலிம்பியாட் 9-வது சுற்று: தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி
x

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

சென்னை,

186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

9-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 9-வது சுற்றில் இந்தியா 1-வது அணி பிரேசிலுடனும் இந்தியா 2-வது அணி அஜர்பைஜானுடனும் மோதி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 9-வது சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story