செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டி; பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா...!


செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டி; பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா...!
x

Image Courtesy: @FIDE_chess

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய முதல் சுற்று ஆட்டம் டிரா' ஆனது.

பாகு,

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும் , பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது.

ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று 2வது சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். . 2வது சுற்று போட்டியும் சமன் ஆனால் போட்டி டை பிரேக்கருக்கு நகரும்.

1 More update

Next Story