காமன்வெல்த்: ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலம் வென்று அசத்தல்...!


காமன்வெல்த்: ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலம் வென்று அசத்தல்...!
x

காமன்வெல்த்தின் ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில், ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் பதக்கத்தின் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 17-ஆக அதிகரித்து உள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.


Next Story