மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி-கெந்தொரை அணி வெற்றி

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி-கெந்தொரை அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் லீக் போட்டிகள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் சோரைகுந்து கிரிக்கெட் அணி மற்றும் கெந்தொரை கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சோரைகுந்து கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 26 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் பாஸ்கர் 54 ரன்கள் எடுத்தார். கெந்தொரை அணியின் பந்து வீச்சாளர்கள் ரகுராம் 4 விக்கெட்டுகள் மற்றும் ரிஷிகேஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தொடர்ந்து விளையாடிய கெந்தொரை அணி 24.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் ஜெய் விக்னேஷ் 35 ரன்கள் மற்றும் ரிஷிகேஷ் 33 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தனர். சோரைகுந்து அணியின் பந்துவீச்சாளர் நரேஷ்குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கெந்தொரை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






