பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடக்கம்


பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடக்கம்
x

கோப்புப்படம் 

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சான் அகாடமி கல்வி குழுமம் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். வயது கட்டுப்பாடு கிடையாது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 28-ந் தேதிக்குள், 'செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.


Next Story