சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 'சாம்பியன்'


சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி சாம்பியன்
x

image courtesy: ANI

சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தியது.

காத்மண்டு,

மத்திய ஆசிய கைப்பந்து கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கைப்பந்து சேலஞ்ச் கோப்பை போட்டி நேபாள தலைநகர் காத்மண்டில் 6 நாட்கள் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று அரங்கேறிய இறுதிசுற்றில் இந்தியாவும், கஜகஸ்தானும் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 25-15, 25-22, 25-18 என்ற நேர் செட்டில் அபார வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தியது. இந்திய அணியில் கேப்டன் நிர்மல் தன்வால், பிரேரோனா, சூர்யா உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர்.

சாதனை படைத்த பெண்கள் அணியினரை இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் அச்யுதா சமந்தா, சேர்மன் வாசுதேவன், பொதுச்செயலாளர் அனில் சவுத்ரி ஆகியோர் பாராட்டினர்.


Next Story