இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஶ்ரீகாந்த் கிடாம்பி அதிர்ச்சி தோல்வி


இந்திய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் ஶ்ரீகாந்த் கிடாம்பி அதிர்ச்சி தோல்வி
x

screenshot from BAI Media twitter video

இன்று நடைபெற்ற போட்டியில் ஶ்ரீகாந்த் கிடாம்பி, விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.

புதுடெல்லி,

மொத்தம் ரூ.7½ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் உலக சாம்பியனும், 7-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரநிலையில் 30-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சுபனிதா கேட்தோங் 21-14, 22-20 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஶ்ரீகாந்த் கிடாம்பி டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். இந்த போட்டியில் கிடாம்பி 14-21, 19-21 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


Next Story