இந்திய ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..! தொடரிலிருந்து வெளியேறினார்


இந்திய ஓபன் பேட்மிண்டன் : முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!  தொடரிலிருந்து வெளியேறினார்
x

Image Courtesy : PTI 

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை நடக்கிறது.

இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ,தாய்லாந்து நாட்டை சேர்ந்த சுபநிடா கேட்டோங் ஆகியயோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற கணக்கில் சுபநிடா கேட்டோங் வெற்றி பெற்றார்.இதனால் பி.வி.சிந்து இந்திய ஓபன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியா நட்சத்திர வீராங்கனை வீராங்கனை சாய்னா நேவால் ,டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பில்ட்டை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றி பெற்றார். இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story