இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் மின் ஹூக் காங்-சென் ஜாய் சோ இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ் பிரனாய் 15-21, 15-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு நடையை கட்டினார்.


Next Story