சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்


சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்
x

இளம்பரிதி சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளையோர் செஸ் போட்டியில் (14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்) சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

சென்னை,

மீரா நினைவு முதலாவது சர்வதேச பிடே ரேட்டிங் ரேபிட் செஸ் போட்டி சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் 2 நாட்கள் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து 360 பேர் பங்கேற்றனர்.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது வீரர் இளம்பரிதி, தமிழகத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், குகன் ஆகியோர் தலா 8 புள்ளிகள் பெற்றனர். டைபிரேக்கர் அடிப்படையில் இளம்பரிதி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் சமீபத்தில் ருமேனியாவில் நடந்த உலக இளையோர் செஸ் போட்டியில் (14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்) சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. முதலிடத்தை பிடித்த இளம்பரிதிக்கு ரூ.25 ஆயிரம் அளிக்கப்பட்டது.

முன்னாள் தேசிய செஸ் வீரரும், ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவன நிர்வாக இயக்குனருமான டி.வி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் பி.நடராஜன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story