ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்
x

Image Courtesy : AFP 

டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

1 More update

Next Story