மீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர்


மீராபாய் சானு தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார் - இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர்
x

தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நொய்டாவில் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான மீராபாய் சானு கலந்து கொள்ளமாட்டார் என்று இந்திய பளுதூக்குதல் சம்மேளன தலைவர் சக்தேவ் யாதவ் நேற்று தெரிவித்தார்.

தொடையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் மீராபாய் தற்போது 95 சதவீத உடல் தகுதியுடன் உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் வகையில் உடல் எடையை குறைத்து வரும் அவரது உடல் தகுதியை பேணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


Next Story