பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்; இந்திய வீராங்கனை சிம்ரன் அரையிறுதிக்கு முன்னேற்றம்



பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் மகளிர் 100 மீட்டர் டி-12 முதல் சுற்று ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.17 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire