புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி
x

Image Courtesy: @ProKabaddi

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் 42-25 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரவு 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.


Next Story