புரோ கபடி லீக்: அரியானா அணியை வீழ்த்தி பாட்னா அணி வெற்றி


புரோ கபடி லீக்: அரியானா அணியை வீழ்த்தி பாட்னா அணி வெற்றி
x

Image Tweeted By @ProKabaddi

தினத்தந்தி 7 Nov 2022 4:15 PM GMT (Updated: 7 Nov 2022 4:18 PM GMT)

பாட்னா அணி 41-32 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புனே ,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் பாட்னா பைரட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பாட்னா அணி 41-32 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாட்னா வீரர் சச்சின் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 1 போனஸ் புள்ளி உட்பட 13 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.


Next Story