புரோ கபடி லீக்: அரியானா அணியிடம் படுதோல்வி அடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ்


புரோ கபடி லீக்: அரியானா அணியிடம் படுதோல்வி அடைந்தது தெலுங்கு டைட்டன்ஸ்
x

Image Tweeted By @ProKabaddi

மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் புனேரி பால்டன் - ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே அணி 32-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் சார்பாக சிறப்பாக விளையாடிய அஸ்லாம் தனது அட்டகாசமான ரெய்டு மூலம் 13 புள்ளிகளை எடுத்து அசத்தினார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரியானா 43-24 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story